8 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் அர்விந்த் கெஜ்ரிவால்!

Subscribe to Oneindia Tamil

Arvind Kejriwal
டெல்லி:டெல்லியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் 8 நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை இன்று நிறைவு செய்தார்.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராகவும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள சுந்தர் நகரி முகாமில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. நேற்று 7-வது நாளாக அவரது போராட்டம் நீடித்தது. கெஜ்ரிவாலை நேற்று இரவு 11 மணியளவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், கெஜ்ரிவால் உடல் நலனைக் கருதி உண்ணாவிரதத்தினை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எட்டாவது நாளாக கெஜ்ரிவாலின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்த நிலையில் இன்று காலை தமது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். அன்னா ஹசாரே வேண்டுகோளை ஏற்று அவர் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+