காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
மேலும் அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், மாட்டு பாஸ்கர், சின்னா உள்ளிட்டோரும் கைது செய்யபப்பட்டனர். இதில் கைதான ரவிசுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிவிட்டார். இந்த வழக்கில் சிக்கிய அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கதிரவன் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 12 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மேலும் கதிரவன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனால் கதிரவனின் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில் விசாரணையை நீதிபதி முருகன் வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் வெளியாகும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications