பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்க்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை
வாஷிங்டன்: பெற்ற குழந்தைகளை இரக்கமின்றி கொன்ற தாய்க்கு 50ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் கேத்தி ஸ்டாக்டன் (32). இவர் சில ஆண்டுக்கு முன்பு ரகசியமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதை ஒரு பைக்குள் உயிருடன் அடைத்து வீதியோரம் போட்டு விட்டார்.
குளிர் தாங்காமல் அந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டது. அங்குள்ள சட்டத்தின்படி முறையற்று குழந்தை பிறந்தாலும் அதை காப்பகத்தில் ஒப்படைத்து விடலாம். யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். இதை மீறியதால் கேத்தி மீது போலீசார் வழக்கு போட்டனர். ஆனால் மருத்துவ சோதனைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவருடைய காரை சோதனை போட்டபோது, டிக்கி பகுதியில் பழைய டயருக்கு அடியில் மேலும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்தன. இவையும் அவரே பெற்றெடுத்த குழந்தைகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த ஈவு இரக்கமற்ற கொலைகளை செய்த கேத்தேவுக்கு சமீபத்தில் கோர்ட் 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.












Click it and Unblock the Notifications