ஆண்கள் கக்கூஸுக்கு அஜீத் பவார் பெயர் சூட்டல்!
மும்பை: சிறுநீர் கழித்தா அணையை நிரப்பி தண்ணீர் விட முடியும் என திமிர்த்தனமாக பேசி மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மகாராஷ்டிர துணை முதல்வரும், மத்திய அமைச்சர் சரத் பவாரின் உறவினருமான அஜீத் பவாரை கிண்டலடிக்கும் வகையில் ஆண்கள் கக்கூஸ் ஒன்றுக்கு அவர் பெயரைச் சூட்டியும், படத்தை வைத்தும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
சமீபத்தில் புனேயில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அஜீத் பவார், சோலாபூரில் ஒரு விவசாயி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால், அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் எப்படி தண்ணீர் வழங்க முடியும்? அணையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாரா? குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் நாம் இருக்கும் நிலையில் சிறுநீர் கூட சுலபமாக வருவதில்லையே? என்றார் கிண்டலாகவும், திமிராகவும்.
மேலும் மின்சாரப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்குமே காரணம் என்றும் பேசினார் பவார்.
இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. இதையடுத்து அஜீத் பவார் மன்னிப்பும் வருத்தமும் கேட்டார். அதேபோல சரத் பவாரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் ... தேர்தல் வேறு வருகிறதே.
இந்த நிலையில், மும்பையில் ஒரு பொதுக் கழிப்பிடத்திற்கு அஜீத் பவாரின் பெயரைப் போட்டு படத்தையும் மாட்டி களேபரப்பபடுத்தியுள்ளனர் சிலர்.












Click it and Unblock the Notifications