டெல்லியில் இடதுசாரி மாணவர்கள் போராட்டத்தில் சிக்கிய மம்தா.. மே.வ. நிதி அமைச்சருக்கு அடி

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த வாரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுதீப்தா குப்தா தலையில் படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். இதை எதிர்த்து மாணவர்கள் போராடினர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகமான யோஜனா பவனுக்கு சென்றனர். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பினர் அங்கு கூடி மமதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ராவைப் பிடித்து தாக்கினர்.
இதைப் பார்த்த மமதா கடுப்பாகி திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவை திட்ட ஆரம்பித்தார். இது என்ன திட்டக் கமிஷன் அலுவலகமா அல்லது அரசியல் மைதானமா என்று சீறினார். மேலும் மாணவர்களை ரவுடிகள் என்று அழைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications