உள்துறை அமைச்சர் ஷிண்டே வீட்டுக்குள் புகுந்து ரகளை... 142 பேர் கைது

நாட்டின் உள்துறை அமைச்சர் வீட்டுக்குள் புக முடியும் அளவுக்கு அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஷிண்டே வீட்டுக்கு திரண்டு வந்தனர். ஜாட் சமுதாயத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கோரிக்கை மனு வழங்குவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.
ஆனால் அமைச்சரை இப்போது பார்க்க முடியாது என்று வாயிலில் நின்றிருந்த பாதுகாவலர்கள் கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்ல அவர்கள் முயன்றனர். ஆனால் பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்கவி்ல்லை. இந்த நிலையில் சிலர் கடுமையாகப் போராடி கேட்டை திறந்து விட்டனர். இதையடுத்து திமுதிமுவென போராட்டக்காரர்கள் ஷிண்டே வீட்டுக்குள் பு்குந்தனர்.
வீட்டு வராண்டா வரைக்கும் வந்து விட்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது ஷிண்டே வீட்டில் இல்லை. மாறாக ரஷ்யா சென்றிருந்தார். இதை போராட்டக்காரர்கள் அறியவில்லை. இதுகுறித்து பாதுகாவலர்கள் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.
ஷிண்டே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர். அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபடுவது, சட்டவிரோதமாக கூடி கலாட்டா செய்வது, அரசு ஊழியர்கலைத் தடுத்து நிறுத்துவது, அரசு ஊழியர்களை மிரட்டி அச்சுறுத்துவது, அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார்.
13 போலீஸார் சஸ்பெண்ட்
ஷிண்டே வீட்டு பாதுகாப்பு குளறுபடிகளைத் தொடர்ந்து பணியில் இருந்த 13 போலீஸார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications