மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே சிபிஐக்கு வழக்குகளை மாற்ற வேண்டும்: ஜெயலலிதா

டெல்லியில் இன்று மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.
அவரது உரையை சட்ட அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது:
நிர்வாக சீரமைப்புக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை மாநில அரசுகளின் மீது மத்திய அரசு திணிக்கக்கூடாது.
மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே சிபிஐக்கு வழக்குகளை மாற்ற வேண்டும்.
மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழும்போது மத்திய படைகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி பெறாமல் அனுப்பலாம் என்ற மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளமுடியாது
காவல்துறையை நவீனப்படுத்த நிதி
காவல்துறையை நவீனப்படுத்துவதற்கான நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில், ஒவ்வொரு முறையும் வாக்குறுதி மட்டுமே அளிக்கப்படுவதாகவும், இந்த முறையாவது வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றங்களை தடுக்க நடவடிக்கை
மேலும், மாநில காவல்துறையினரின் மேம்பாட்டில் தனது அரசு முன்னோடியாகத் திகழ்வதாக கூறியுள்ள ஜெயலலிதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications