For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது

By Mathi
Google Oneindia Tamil News

சந்தோவுலி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக 45 வயது போலீஸ் டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறவர் பிரதியூமன்குமார் யாதவ். 45 வயதான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தேர்வுலி மாவட்டத்தின் பலுவா கிராமத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு பலுவா கிராமத்தைச் சேர்ந்த சிலர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருமணம் நடைபெற கோயிலை முற்றுகையிட்ட போலீசார் மணக்கோலத்தில் இருந்த டி.எஸ்.பி.யையும் சிறுமியின் பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

13வது சிறுமியை பிரதியூமன்குமார் ஏன் திருமணம் செய்ய முயன்றார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A senior police official allegedly trying to marry a minor girl in Balua area of Chandauli in Uttar Pradesh has been nabbed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X