இலங்கைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ.: சொல்கிறார் குணதாச அமரசேகர
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. இருப்பதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழகத்துடன் அமெரிக்காவிற்கு பிரத்தியேக உறவுகள் காணப்படுகின்றன. சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்தார். தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சாதாரண மக்களினால் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருத வேண்டும். இந்த போராட்டங்களுக்கு பின்னணியில் அமெரிக்காவின் அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. உள்ளது.
ஜெயலலிதா சிறந்த நடிகை என்ற போதிலும் புத்திசாலி அல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டவும், தமிழகத்தில் சாதாரண மக்களின் இன உணர்வுகளைத் தூண்டவும் சிலர் முயற்சிக்கின்றனர். சீன, இந்திய எழுச்சி காரணமாக அமெரிக்கா வலுவிழந்து செல்கின்றது. எனவே ஆசிய பிராந்தியத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதனை அமெரிக்கா விரும்புகின்றது.
தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு குழப்பங்கள் விளைவித்தால் அது அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications