For Daily Alerts
Just In
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி ஏற்படுத்திய சூட்கேஸ்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட உள்நாட்டு விமான முனையம் சமீபத்தில் தான் செயல்பாட்டுக்கு வந்தது.
இங்கு விமான புறப்பாடு பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் இடத்தில் இன்று காலை 6 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்றுக் கிடந்தது.
நீண்ட நேரம் அனாதையாகக் கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிரெக்டர் கருவியுடன் வந்து சூட்கேசை சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை.
பின்னர் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தபோது அதில், துணிமணிகள், சாக்லெட்கள் இருந்தன.
யாரோ ஒரு பயணி அதை தவறுதலாக விட்டுச் சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
Comments
English summary
A suitcase left by a passenger has caused bomb case at Chennai Meenambakkam airport today
Story first published: Tuesday, April 16, 2013, 13:35 [IST]