உயிருக்குப் போராடும் டெல்லி சிறுமி! தொடர் போராட்டங்களால் 144 தடை உத்தரவு!
டெல்லி: டெல்லியில் பலாத்காரத்துக்குள்ளான சிறுமி மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார். சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. . இந்தப் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் 5 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானார். அதே கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்த 22 வயது பீகார் இளைஞர் மனோஜ்குமார்தான் அந்த சிறுமியை 4 நாட்களாக அடைத்து வைத்து காட்டு மிராண்டித்தனமாக பாலியல் கொடுமை செய்திருக்கிறானர். தற்போது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய அந்த காமக் கொடூரனை கைது செய்த போலீசார் டெல்லிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். 40 மணி நேரம் சிறுமியை அறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறினான். சிறுமி மயக்கம் அடைந்ததால் இறந்து விட்டதாக கருதி தப்பி ஓடி விட்டான். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இந்நிலையில் சிறுமி வழக்கில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் நேற்று போராட்டம் வெடித்தது. போலீஸ் மீது அதிருப்தி அடைந்த பெண்களும், போராட்டக்காரர்களும் டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன் திரண்டனர். அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட பகுதியில் காந்தி நகர் போலீஸ் நிலையம், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே வீடு ஆகிய இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை இன்று பாஜகவின் மகளிர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications