உயிருக்குப் போராடும் டெல்லி சிறுமி! தொடர் போராட்டங்களால் 144 தடை உத்தரவு!
டெல்லி: டெல்லியில் பலாத்காரத்துக்குள்ளான சிறுமி மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார். சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. . இந்தப் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் 5 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானார். அதே கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்த 22 வயது பீகார் இளைஞர் மனோஜ்குமார்தான் அந்த சிறுமியை 4 நாட்களாக அடைத்து வைத்து காட்டு மிராண்டித்தனமாக பாலியல் கொடுமை செய்திருக்கிறானர். தற்போது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய அந்த காமக் கொடூரனை கைது செய்த போலீசார் டெல்லிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். 40 மணி நேரம் சிறுமியை அறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறினான். சிறுமி மயக்கம் அடைந்ததால் இறந்து விட்டதாக கருதி தப்பி ஓடி விட்டான். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இந்நிலையில் சிறுமி வழக்கில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் நேற்று போராட்டம் வெடித்தது. போலீஸ் மீது அதிருப்தி அடைந்த பெண்களும், போராட்டக்காரர்களும் டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் முன் திரண்டனர். அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட பகுதியில் காந்தி நகர் போலீஸ் நிலையம், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே வீடு ஆகிய இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை இன்று பாஜகவின் மகளிர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் தீவிரமடைவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications