நிலக்கரி ஊழல்- பிரதமர் பதவி விலக பாஜக வலியுறுத்தல்! நாடாளுமன்றம் முடங்கியது!!

Subscribe to Oneindia Tamil

BJP demands PM's resignation, Parliament adjourned for the day
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் நாடாளுமன்ற இரு சபைகளும் இன்றும் முடங்கின. லோக்சபா வரும் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஒரு மாத விடுமுறைக்குப்பின் நேற்று தொடங்கியது. டெல்லி சிறுமி பலாத்கார சம்பவம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றால் இரு சபைகளும் முடங்கின. இன்று 2-வது நாளாக பார்லிமென்ட் கூடிய போதும் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்.

மேலும் சில எம்.பிக்கள் டெல்லி சிறுமி பலாத்கார சம்பவம் மற்றும் ஸ்பெக்ட்ரம் முறை கேடு பற்றியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் லோக்சபா வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் இதே அமளி நீடிக்க பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு கூடிய போதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

2வது நாளாக பார்லிமென்ட் முடக்கப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக இன்று காலை பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் எல்.கே. அத்வானி தலைமையில் நடைபெற்றது. இதில் நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர், சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+