For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 18 முன்னாள் விடுதலைப் புலிகள்: இலங்கை அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொழும்பு: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக விடுதலைப்புலிகளாக இருந்நது சரணடைந்த 18 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய, இலங்கை மறுவாழ்வு மற்றும் சிறை மறுசீரமைப்புத் துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீரா, கடந்த சில நாட்களாக நடந்த மறுவாழ்வு திட்டங்களின் போது 180 இளைஞர்கள் விளையாட்டு திறன் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்றார். குறிப்பாக துப்பாக்கி சுடுதல், கராத்தே, கால்பந்து, நீச்சல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.

அவர்களில் 18 பேர் ஆசிய விளையாட்டு போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பார்கள். அவர்கள் கொழும்பில் உள்ள விளையாட்டு விடுதிக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
About 18 former LTTE members, including four shooters, could enter Sri Lanka's Asian Games contingent, the Minister of Rehabilitation and Prison Reforms has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X