எரிச்சுடாதீங்க... நா உயிரோடதான் இருக்கேன்: மதுரையில் நடந்த அதிசய சம்பவம்
மதுரை: இறந்து விட்டதாக கருதப்பட்டவர், இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்ததாக கருதப்பட்டவரின் மனைவி மகிழ்ச்சி அடைந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அசோகன் தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அசோகன் நேற்று மதியம் இறந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர் அசோகனின் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் உறவினர்கள், கட்சியினர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை தகனம் செய்வதற்கு முன்பு அசோகனின் உடல் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது அவரது உடல் அசைந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் அவரது மனைவி கணவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் அசோகனுக்கு பழச்சாறு கொடுத்தார். அதைக் குடித்த அவர் தான் நன்றாக இருப்பதாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர்களால் இறந்து விட்டவர் என்று கூறப்பட்டவர் உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் டி.கல்லுப்பட்டி, மீனாட்சி புரத்தை சேர்ந்த நடராஜன் மாரடைப்பால் இறந்து விட்டதாக அதே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் அவருக்கும் இறுதி சடங்குகள் செய்த போது, மீண்டும் உயிர் பிழைத்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications