கூத்தாண்டவர் கோவிலில் குவிந்த திருநங்கைகள்... பாதுகாப்பு வழங்க கோரிக்கை
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி கூவாகத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் குவிந்துள்ளனர். ஆனால் அங்கு வரும் திருநங்கைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். இங்கு ஆண்டு தோறும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் திருவிழா நடைபெறும்.
திருநங்கைகள் தங்கள் குலதெய்வமாக கூத்தாண்டவரை வழிபடுகின்றனர். சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுதோறும் கூவாகத்தில் கூடுவது வழக்கம்.

விழாவின் முக்கிய அம்சமான தாலிகட்டும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் குவிந்துள்ளனர். மணப்பெண் போல அலங்கரித்துக் கொள்ளும் திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் இன்று இரவு தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர் விடிய விடிய மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி மகிழ்வார்கள்.
நாளை காலை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதன்பின்னர் அரவாண் களப்பலியும், தாலி அறுத்தல் நிகழ்வும் நடைபெறும். ஆற்றில் குளித்துவிட்டு விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு பின்னர் ஊர் திரும்புவார்கள்.
பாலியல் தொந்தரவு
கூவாகம் திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து கூட திருநங்கைகள் வரும் நிலையில் சென்னையில் வசிக்கும் சில திருநங்கைகள் விழாவிற்கு செல்லாமல் தவிர்த்து வருகின்றனர். காரணம் கூவாகத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுதான் என்கின்றனர்.
திருவிழாவிற்கு வரும் கிராமத்து ஆண்கள் பலரும் தங்களை விபச்சாரம் செய்பவர்கள் என்று நினைத்து அணுகுகின்றனர் என்றும், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தால் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications