பிரதமராக ஆசை இல்லை.. கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன்...: ப.சிதம்பரம்
டெல்லி: தமக்கு பிரதமராகும் எண்ணம் எதுவுமே இல்லை... கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் நீங்கள் பிரதமராகிவிட்டால் யார் நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

மேலும் மத்திய அரசு இன்னும் 13 மாதங்கள் ஆட்சியில் இருக்கும். அப்போது இந்தியாவின் வளர்ச்சி 8% எட்டும். அடுத்த 2 முதல் 4 மாதங்களில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்தல் மசோதா, 49% அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் காப்பீட்டு மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். நிலக்கரி துறை, சாலை துறை ஆகியவற்றை கண்காணிக்க புதிய ஒழுங்கு முறை ஆணையங்கள் தேவைப்படுகின்றன என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications