ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டத்தை நிறைவேற்றும் 14வது நாடு பிரான்ஸ்: முதல் திருமணம் ஜூனில்...
பாரிஸ்: பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரான்சில் ஓரினச்சேர்ககையாளர்களிடையே திருமணத்திற்கு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு மட்டங்களில் பிரச்சினை எழுப்பப்பட்டது. நாட்டின் பாரம்பரிய பழக்கத்திற்கு எதிரான இந்த ஓரினச்சேர்க்கைக்கு பழமைவாத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.
இந்நிலையில், தலைநகர் பாரீசில் இதுகுறித்து தொடர் போராட்டங்களும், விவாதங்களும் நடைபெற்றன.

14வது நாடு...
ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டத்தை நிறைவேற்றும் 14வது நாடு பிரான்ஸ் ஆகும்.

அபார வெற்றி...
பிரான்சின் தேசிய சட்டசபையில் இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு 331-225 வாக்குகள் பெற்று பெரும் ஆதரவுடன் நேற்று சட்டம் நிறைவேறியது.

பிரச்சினை வருமோ...
இந்த திருமணச்சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடக்கும் என ஆயிரக்கணக்கான போலீசார் தேசிய சட்டசபை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

முதல் திருமணம் ஜூனில்...
இந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான முதல் திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கும் என்று நீதித்துறை மதிரி கிருஸ்டியன் தவுபிரா கூறினார்.

நியூசிலாந்தும் ஒப்புதல்...
இதுபோன்று ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு போன வாரம் நியூசிலாந்து ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications