For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரம்பலூரில் ஷோரூமில் பணத்தோடு 2 புதிய கார்களையும் லவட்டிய காஸ்ட்லி திருடர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஷோரூமில் இருந்து 2 புதிய கார்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான புதிய கார் விற்பனை ஷோரூம் ஒன்று உள்ளது.நேற்று இரவு வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இரவு காவலாளி தங்கவேல் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

அதிகாலை அங்கு வந்த 3 மர்ம நபர்கள் காவலாளி தங்க வேலுவை நாற்காலி ஒன்றில் கட்டிபோட்டு அவர் வைத்திருந்த ஷோரூம் சாவியை எடுத்து நிறுவனத்தை திறந்து அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 புதிய கார்களை வெளியில் எடுத்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம், 2 கம்ப்யூட்டர்கள், 1 எல்.சி.டி. டிவி மற்றும் சில பொருட்களை எடுத்து கொண்டு காரையும் கடத்தி சென்றனர்.பின் காவலாளி தங்க வேல் நிறுவன மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் பெரம்பலூர் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கார்களை கடத்தி சென்ற மர்மநபர்கள் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே 2 கார்களையும் நிறுத்தி விட்டு பணத்துடன் தப்பி சென்று விட்டனர்.ரோந்து சென்ற போலீசார் அந்த கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தப்பி ஓடிய மர்ம நபர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Near Perambalur 2 new cars which was placed for showcase have been looted from the showroom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X