மரக்காணம் கலவரம்- தைலாபுரத்தில் ராமதாஸ் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தமது தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டத்தை கடந்த 25ந் தேதி நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள சென்ற பாமகவினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமானது.

இந்த கலவரத்துக்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் தான் என பாமக நிறுவனர் ராமதாசும், பாமக தான் காரணம் என தொல்.திருமாவளவனும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட தலைவர்களை சந்தித்து மரக்காணம் கலவரம் பற்றி திருமாவளவன் விளக்கி வருகிறார்.

மேலும் இந்தக் கலவரம் தொடர்பாக ராமதாஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்க்கு பாமக துணை பொதுச் செயலாளர்கள் அவரசமாக வரவைக்கப்பட்டனர். 11 மணியளவில் கூட்டம் தொடங்கி யது. கூட்டத்தில் அன்புமணி ராமதாசும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் திருமாவளவனை போல் நாமும் பிற கட்சி தலைவர்களை சந்தித்து நம் நிலையை விளக்குவதா என்ற ஆலோசனை நடந்ததாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+