கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக உளவாளி யாருமில்லை...: உம்மன் சாண்டி

Subscribe to Oneindia Tamil

Oommen Chandy
திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக உளவாளி யாரும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கேரள தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் ஒருவர் உளவாளி போன்ற செயல்படுகிறார், ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் தமிழகத்துக்கு தருகிறார் என செய்திகள் வெளியாகின. உன்னிகிருஷ்ணன் என்பவர்தான் கேரள தலைமைச் செயலகத்தில் ஆற்று நீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசுக்காக உளவு பார்ப்பதாகவும் கூறபட்டது பரம்பிக்குளம்- ஆழியாறு நீரை பகிர்ந்து கொள்வது குறித்து உன்னிகிருஷ்ணன் செயல்பாடுகள் பற்றி கேரள அரசு ஊழியர் ஒருவர் மாநில உளவுப்பிரிவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி நேற்று கூறுகையில், இதுகுறித்த உளவுத் துறையின் அறிக்கையை பார்த்தேன். எந்த முக்கிய ஆவணத் தகவல்களும் தமிழகத்துக்கு தரப்படவில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை என்றார் சாண்டி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+