பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும்: சுஷ்மா ஸ்வராஜ்

தனி தெலுங்கானா கோரி சன்சத் யாத்ரா-தில்லி சலோ என்ற பெயரில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள தலைவர்கள், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர். நேற்றைய போராட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கானா தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த மசோதாவை பாஜக ஆதரிக்கும். மத்தியில் பாஜக அரசு அமைந்தால், 100 நாட்களில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்றார்.
இதில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, சமூக ஆர்வலரும் உலக ஆர்ய சமாஜ் கவுன்சில் தலைவருமான ஸ்வாமி அக்னிவேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பிரிவினர், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு நுழைவுவாயில் அருகே தடையை மீறி போராட்டம் நடத்தினர். மற்றொரு பிரிவினர் பார்லிமென்ட் நுழைவு வாயில் அருகே உள்ள சௌக் சந்திப்பிலும், வேறு சிலர் பார்லிமென்ட் சாலை சந்திப்பிலும் திரண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications