சவீதா மரணம் எதிரொலி: அம்மாக்களை காப்பாற்ற அயர்லாந்தில் புதிய கருக்கலைப்புச் சட்டம்
Subscribe to Oneindia Tamil

இந்திய பல் டாக்டர் சவிதா ஹாலப்பா, 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற கருக்கலைப்பு செய்ய வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவ நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்ய முடியாது என அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சவிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற சவீதாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் அவர் இறந்தார் எனத் தெரியவந்ததையடுத்து, சர்வதேச அளவில் அயர்லாந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக, தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது கருக்கலைப்பு செய்ய புதிய சட்டம் வழி செய்கிறது.












Click it and Unblock the Notifications