ஆந்திராவில் சிக்கிய 25 இலங்கை மீனவர்கள்! 1500 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல்!!
நெல்லூர்: இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 25 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 1500 கிலோ எடையுள்ள மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் அருகே இஸ்குபள்ளி கடற்பரப்பில் நேற்று 3 படகுகளில் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த படகில் 14 மீனவர்கள் இருந்தனர். இதுபற்றி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,200 டன் எடையுள்ள மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக மே 1-ந் தேதியன்று ஆந்திராவில் மற்றொரு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. ஆந்திர கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவதால் கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications