ஏரல் அருகே சால்க்லேட் வாங்க வந்த சிறுமியை கற்பழித்த பலசரக்கு கடைக்காரர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துகுடி அருகே சாக்லேட் வாங்க கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை கடைக்காரர் கற்பழித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர்காடு தளவாய்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் சாக்லேட் வாங்க அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்றார். 4ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பரதன் என்பவரின் கடைக்கு சென்று சாக்லேட் கேட்டார். அப்போது பரதன் சிறுமியை கடையின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி கடையில் நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் நேராக கடைக்கு சென்றனர். ஆனால் அதற்குள் பரதன் தலைமறைவாகிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஏரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பரதனை தேடி வருகின்றனர். பரதனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+