அமளி, துமளியால் லோக்சபாவில் 93 மணிநேரம் வீணடிப்பு: ஒன்னும் உருப்படியா நடக்கல
டெல்லி: நேற்றுடன் முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்சபாவில் நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல் மற்று 2ஜி விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 92 மணிநேரம் 40 நிமிடங்கள் வீணாகியுள்ளது.
லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்ட கூட்டத் தொடர் ஆகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடரை அடுத்துதற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் தான் அதிகப்படியான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல் மற்றும் 2ஜி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பெரும்பாலான நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்படி ஒத்தி வைக்கப்பட்டதால் எந்த பணியும் செய்யாமல் 92 மணிநேரம் 40 நிமிடங்கள் வீணாகியுள்ளது.
ராஜ்யசபாவிலும் ஒன்றும் பெரிதாக பணிகள் நடந்துவிடவில்லை. ராஜ்யசபாவில் மொத்தம் 83 மணிநேரம் தான் பணியாற்றியுள்ளனர்.

18ல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்
லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 18 மசோதாக்களில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை நிதி மசோதாக்கள். வேலை இடத்தில் பாலியல் தொந்தரவு குறித்த சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல்-மே-இல் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை
லோக்சபாவில் 94 மணிநேரம் மற்றும் 42 நிமிடங்கள் மட்டுமே பயனுள்ளதாக இருந்துள்ளது. அதுவும் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தான் பணியாற்றியுள்ளனர். கடந்த மாதம் துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டத்தில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை.

கேள்வி நேரமும் கம்மி தான்
லோக்சபாவில் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் வெறும் 23 சதவீத நேரம் தான் கேள்வி நேரம் நடந்தது. ராஜ்யசபாவில் இந்த சதவீதம் 30 ஆக உள்ளது. லோக்சபாவில் 37 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்யசபாவில் 49 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications