குயில புடிச்சு கூண்டில் அடச்சு.. 'சின்னதம்பியான' சிபிஐ.. ஒப்புக் கொள்கிறார் இயக்குனர்!

நிலக்கரி ஊழல் அறிக்கை குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக இணை செயலர்கள் தலையிட்டு முக்கிய பகுதிகளை நீக்கியிருந்தனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ இயக்குனர் ரஞ்சின் சின்ஹாவும் விசாரணை அறிக்கை திருத்தம் செய்யப்பட்டது உண்மைதான் என்று கூறினார். இந்த அறிக்கை மீதான நேற்றைய விசாரணையின் போது, மத்திய அரசையும் சிபிஐ அமைப்பையும் உச்சநீதிமன்றம் வெளுவெளுத்துவென வாங்கியது.
அப்போதுதான் 'கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிபிஐ அமைப்பு இருக்கிறது...சிபிஐக்கு ஏராளமான எஜமானர்கள் இருக்கின்றனர்.. அவர்கள் சொல்வதைச் சொல்லுகின்ற கிளிப் பிள்ளையாக இருக்கிறது என சாடியிருந்தது. இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவிடம் செய்தியாள்ர்கள் இன்று கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர். உச்ச நீதிமன்றம் கூறிய அனைத்தும் சரியே என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார்...
அதுசரி குயில புடிச்சு கூண்டில் அடச்சுன்னு சின்னதம்பி பிரபு போலவா சிபிஐ அமைப்பு பாட முடியும்?.












Click it and Unblock the Notifications