குயில புடிச்சு கூண்டில் அடச்சு.. 'சின்னதம்பியான' சிபிஐ.. ஒப்புக் கொள்கிறார் இயக்குனர்!

Subscribe to Oneindia Tamil

Ranjit Sinha
டெல்லி: சின்னதம்பி திரைப்படத்து பிரபு போல சிபிஐ- அமைப்பின் நிலைமை மாறிவிட்டது.. கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல.. எஜமானர்கள் சொல்வதை சொல்லக் கூடிய கிளியாக இருக்கிறது சிபிஐ அமைப்பு என்று உச்சநீதிமன்றம் சொன்னது சரிதான் என்கிறார் அதன் இயக்குனர் ரஞ்சன் சின்ஹா.

நிலக்கரி ஊழல் அறிக்கை குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக இணை செயலர்கள் தலையிட்டு முக்கிய பகுதிகளை நீக்கியிருந்தனர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ இயக்குனர் ரஞ்சின் சின்ஹாவும் விசாரணை அறிக்கை திருத்தம் செய்யப்பட்டது உண்மைதான் என்று கூறினார். இந்த அறிக்கை மீதான நேற்றைய விசாரணையின் போது, மத்திய அரசையும் சிபிஐ அமைப்பையும் உச்சநீதிமன்றம் வெளுவெளுத்துவென வாங்கியது.

அப்போதுதான் 'கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிபிஐ அமைப்பு இருக்கிறது...சிபிஐக்கு ஏராளமான எஜமானர்கள் இருக்கின்றனர்.. அவர்கள் சொல்வதைச் சொல்லுகின்ற கிளிப் பிள்ளையாக இருக்கிறது என சாடியிருந்தது. இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவிடம் செய்தியாள்ர்கள் இன்று கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர். உச்ச நீதிமன்றம் கூறிய அனைத்தும் சரியே என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார்...

அதுசரி குயில புடிச்சு கூண்டில் அடச்சுன்னு சின்னதம்பி பிரபு போலவா சிபிஐ அமைப்பு பாட முடியும்?.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+