பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....

Subscribe to Oneindia Tamil

India planning underwater power line to Sri Lanka
கூடங்குளம்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்பது போராட்டக்காரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இலங்கைக்கு பெருமகிழ்ச்சியாக அமைந்துவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டுவிட்டால் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் இலங்கைக்கு கடல்வழியே கூடங்குளம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2010ஆம் ஆண்டே இலங்கை மின்சார சபையும் இந்திய பவர் கிரிட்டும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. இத்திட்டம் 2014ஆம் ஆண்டு முடிவடைந்து செயல்படத் தொடங்கும் என்று இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

கூடங்குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்லப்படும். இதில் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலடி கேபிள் பதிக்கப்படும். அதாவது தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை தரைவழி கேபிளும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கடலடி கேபிளும் பதிக்கப்பட இருக்கிறது. இப்படி கடலடியே கேபிள் அமைக்கப்படும் போது சர்ச்சைக்குரிய ராமர் பாலமும் தகர்க்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் எனப்படுகிற மணல் திட்டுகளை தகர்க்க கடும் எதிர்ப்பு வரும் நிலையில் ஓசையின்றி இலங்கைக்காக 'ராமர்' பாலம் தகர்க்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது....இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தொடர்ந்தும் எச்சரித்து வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருப்பதால் 'கடல்வழி' இந்திய மின்சாரத்துக்காக காத்திருக்கிறது இலங்கையின் தலைமன்னார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+