காற்றாலை மின் உற்பத்தி அமோகம்- சென்னையில் 2 நாட்களாக மின்வெட்டே இல்லை!

தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து மின்தடை செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் தினமும் இரண்டு மணி நேரமும், பிற மாவட்டங்களில் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரமும், கிராமப்புறஙகளில் 10 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.
தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும், மின்தடை நேரத்தை முறையாக அறிவிக்க கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய தொகுப்பில்இருந்து தமிழகத்தி்ற்கு கூடுதலாக மின்சாரம் வழங்க தமிழக அரசும் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் காற்றாலை மின் உற்பத்தி கடந்த வாரம் வெகுவாக குறைந்தது. இதனால் கடந்த இரு வாரங்களாக தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டது. தினமும் 6 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆனால் நேற்றுமுன்தினத்தில் இருந்து தென்மாவட்டங்களில் அதிக அளவு காற்று வீச தொடங்கியதால் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும், மின் இரவில் அவ்வப்போது மின்தடையும் ஏற்படும். தற்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பால் மின்தடை மேலே கண்ட நேரத்தில் இல்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேசமயம் சென்னையில் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களாக மின்வெட்டு இல்லை. இதனால் மக்கள் குஷியடைந்துள்ளனர். அவியும் வெயிலுக்கு இது சற்றே சந்தோஷமான செய்தி என்று மக்கள் கூறுகின்றனர்.
.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications