ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: பதறியடித்து ஓடும்போது மாரடைப்பால் மூதாட்டி மரணம்
தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பயத்தில் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பள்ளத்தாக்கில் உள்ள சோட்டி கிராமத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்படி பயத்தில் ஓடி வந்த 61 வயது நசீமா பேகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பதர்வா பள்ளத்தாக்கில் இன்று அதிகாலை 1.28 மணி, 1.30 மணி மற்றும் 1.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.3 மற்றும் 5.0 ஆக பதிவாகி இருந்தது.












Click it and Unblock the Notifications