பனியில் இருந்து ஆப்பிளை காப்பாற்ற ஹெலிகாப்டர்: கனடா தோட்டக்காரரின் பாசம்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பனிப்படலம் மூடிக்கொள்ளும் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கலங்கிய ஆப்பிள் தோட்டக்காரர் ஃபில் லியால், வேறு வழியின்றி ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.
அந்த ஹெலிகாப்டர் அவரது ஆப்பிள் தோட்டத்தில் தாழப் பறந்து, ஆப்பிள் மரங்கள் மீது வெப்பக் காற்றை வீசியது. இதனால் பனிப்படலம் மூடாமல் ஆப்பிள் தப்பியது.
"ஒரு நாள் இரவு ஆப்பிள் மரங்களை பனிப்படலம் மூடிக்கொண்டால், 90 சதவீத ஆப்பிள்கள் அழிந்து விடும். எனவே செலவு அதிகமானாலும், இந்த நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை" என்கிறார் தோட்டக்காரர் ஃபில் லியால்.
இந்த இக்கட்டான நிலை கனடா நாட்டு ஆப்பிள் தோட்டக்காரர்களுக்கு மாத்திரம் என்றில்லை, தெற்கே அமெரிக்காவிலும், புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாநில தோட்டக்காரர்களும், இப்படிப்பட்ட சிகிச்சைகளை செய்தனர்.
மிக்சிகனில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் மூலம் வெப்பக் காற்றை அடித்ததன் மூலம்தான் ஆப்பிள்கள் அழுகாமல் தப்பித்துக் கொண்டன.












Click it and Unblock the Notifications