பனியில் இருந்து ஆப்பிளை காப்பாற்ற ஹெலிகாப்டர்: கனடா தோட்டக்காரரின் பாசம்

Subscribe to Oneindia Tamil

Apple orchard calls in the chopper to ward off frost
ஒட்டாவா: கனடா நாட்டு தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள ஆப்பிள் தோட்டம் ஒன்றில் குளிரில் தவித்த ஆப்பிள்களை, ஹெலிகாப்டர் மூலம் வெப்பக்காற்று வீசவைத்து பாதுகாத்துள்ளார் தோட்டக்காரர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பனிப்படலம் மூடிக்கொள்ளும் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கலங்கிய ஆப்பிள் தோட்டக்காரர் ஃபில் லியால், வேறு வழியின்றி ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.

அந்த ஹெலிகாப்டர் அவரது ஆப்பிள் தோட்டத்தில் தாழப் பறந்து, ஆப்பிள் மரங்கள் மீது வெப்பக் காற்றை வீசியது. இதனால் பனிப்படலம் மூடாமல் ஆப்பிள் தப்பியது.

"ஒரு நாள் இரவு ஆப்பிள் மரங்களை பனிப்படலம் மூடிக்கொண்டால், 90 சதவீத ஆப்பிள்கள் அழிந்து விடும். எனவே செலவு அதிகமானாலும், இந்த நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை" என்கிறார் தோட்டக்காரர் ஃபில் லியால்.

இந்த இக்கட்டான நிலை கனடா நாட்டு ஆப்பிள் தோட்டக்காரர்களுக்கு மாத்திரம் என்றில்லை, தெற்கே அமெரிக்காவிலும், புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாநில தோட்டக்காரர்களும், இப்படிப்பட்ட சிகிச்சைகளை செய்தனர்.

மிக்சிகனில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் மூலம் வெப்பக் காற்றை அடித்ததன் மூலம்தான் ஆப்பிள்கள் அழுகாமல் தப்பித்துக் கொண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+