ஈரான் பெண்களின் அதிபர் கனவு அம்பேல்: ஆண் மட்டுமே அதிபர் என மதகுரு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்: ஈரானின் அதிபராக பெண்கள் வரமுடியாது என மதகுரு அயோதல்லா முகமது யாஸ்டி தெரிவித்துள்ளார்.
ஈரானில் வரும் ஜூன் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அதில் சுமார் 30 பெண்கள் போட்டியிட எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில், அந்நாட்டின் மதத்தலைவர் அயோதல்லா முகமது யாஸ்டி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ' அதிபர் தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க வாய்ப்பு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.
ஈரானின் அரசியல் அமைப்பிலும் கூட ஆண்கள் தான் அதிபராக வரமுடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈரானின் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications