ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டாலும் போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், ஐபிஎல் 6 ஆவது கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்றும் ரெய்டில் ரூ. 20 லட்சம்
இதனிடையே சூதாட்டப் புகாரில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்களில் ஒருவரான அஜித் சண்டிலாவின் உறவினர் ஒருவரின் ஃபரிதாபாத் வீட்டில் இன்று நடைபெற்ற சோதனையில் 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications