2லட்சத்துக்கு டிரஸ்... கேர்ள் பிரண்ட்க்கு காஸ்ட்லி போன்: கலக்கிய ஸ்ரீசாந்த்

Subscribe to Oneindia Tamil

Sreesanth bought clothes worth Rs 2 lakh, gifted expensive phone to girlfriend: Police
டெல்லி: கிரிக்கெட் சூதாட்ட பணத்தில் ஸ்ரீசாந்த் ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு ஆடைகள் வாங்கியும், தோழிக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசளித்தும் உல்லாசமாக வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அகித் சவாண் மற்றும் முன்னாள் வீரர்கள், தரகர்கள் என மொத்தம் 18 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சி போட்டி வீரர் பாபுராவ் யாதவ் முதலில் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு பின் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஸ்ரீசாந்த் ஒரே நாளில் மும்பையில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விலை உயர்ந்த ஆடைகள் வாங்கியது தெரியவந்துள்ளது. இதற்கான தொகையை நேரடி பணமாகவே அவர் செலுத்தியிருக்கிறார். புதிதாக வாங்கப்பட்ட அந்த ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் , ஆடை வாங்க கொடுத்த அப்பணம் சூதாட்ட பணமாக இருக்கும் என சந்தேகிக்கின்றனர்.

மேலும், ஸ்ரீசாந்த் தனது தோழி ஒருவருக்கு ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள ‘பிளாக்பெர்ரி இசட் 10' மாடல் செல்போனை பரிசாக வழங்கியதும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீசாந்த் கொடுத்த தகவல்படி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால், அப்பெண்ணுக்கும், இந்த கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+