பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் அல்லிநகரைச் சேர்ந்த சங்கையா மகன் சரவணன்(35). போலீஸ்காரர். அவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆயுதப்படையில் இருந்த போது சரவணன் தேன்மொழியை காதலித்து மணந்தார். அவர்களுக்கு தேவிப்பிரியா(12) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சரவணன் பழனி தாலுகாவில் போலீஸ்காரராக வேலை பார்த்தார். அதன் பிறகு அவர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். காவல் நிலையத்திற்கு செல்ல வசதி கருதி தனது மனைவி, மகளுடன் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

தேன்மொழி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நூலகத்தில் வேலை பார்க்கிறார். தேவிப்பிரியா தேனியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் முதல் சரவணன் விடுப்பில் இருந்தார். இந்நிலையில் தேன்மொழி மகளை அழைத்துக் கொண்டு நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் சரவணன் திறக்கவில்லை.

நெடுநேரம் ஆகியும் சரவணன் கதவைத் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் சரவணன் மயக்க நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தாலுகா போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த விவரம் வருமாறு,

சரவணனுக்கும், ஒரு பெண் எஸ்.ஐ.க்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சரவணன் தனது கள்ளக்காதலிக்கு ரூ.60,000 வரை செலவு செய்துள்ளார். இது குறித்து அறிந்த தேன்மொழி சரவணனை கண்டித்ததோடு, இது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரவணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+