‘கோ கிரீன், சேவ் எர்த்’ இந்திய மணல் சிற்பிக்கு பரிசு: டென்மார்க்
லண்டன்: டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் மணல் சிற்ப கண்காட்சியில் இந்திய மணல் சிற்ப கலைஞருக்கு பரிசு கிடைத்துள்ளது.
டென்மார்க் நாட்டில் கோபன்ஹாகென் நகரில் சர்வதேச மணல் சிற்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உள்பட 18 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய மணற் சிற்பங்களை போட்டியாளர்கள் வடிவமைத்தார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, சுதர்சன் பட்நாயக் வடித்த மணல் சிற்பம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அது மிகச் சிறந்த கருத்துள்ள சிற்பமாக தேர்வு பெற்று அவருக்கு பரிசு பெற்றுத் தந்தது.

பூமியை காப்பாற்றுங்கள்...
‘கோ கிரீன், சேவ் எர்த்' என்ற நோக்கத்துடன் அவர் 15 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கி இருந்தார்.

ஆகஸ்ட் வரை அனுமதி...
மணல் சிற்ப கண்காட்சி 7 நாட்களே நடைபெறும் என்றாலும் அதில் இடம் பெற்ற சிற்பங்களை கண்டுகளிக்க பார்வையாளர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் வரையில் அனுமதிக்கப்படுவார்கள்.

கானாவுக்கு ஜூரி..
கானா நாடு ஜூரி பரிசையும், இத்தாலி நாடு ஆர்டிஸ்ட் பரிசையும் பெற்றன.

போன வருஷம் சுதர்ஷனுக்கு ஜூரி....
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவரான, சுதர்சன் பட்நாயக் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ஜூரி பரிசை பெற்றார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications