இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 26 மீனவர்கள் தாயகம் திருப்பினர்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இன்று காலை தாயகம் திரும்பினர்

கடந்த ஏப்ரல் 5ம் தேதி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு நான்கு முறை காவல் நீட்டிப்பு வழங்கி ஊர்க் காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.

ஆனால், கடல்சீற்றம் காரணமாக அவர்கள் வர தாமதம் ஏற்பட்டது. சர்வதேச கடல் எல்லையில் காரைக்கால் மீனவர்கள் இந்திய கடலோரா காவல் படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலையில் மீனவர்கள் தங்களின் சொந்த ஊரான காரைக்காலுக்கு திரும்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+