சத்தீஸ்கரில் காங்கிரஸ் பேரணியில் நக்சலைட் தாக்குதல்: மாநில தலைவர் உள்பட 25 பேர் பலி
ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 25 பேர் பலியாகினர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சத்தீஸ்கர் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பரிவர்தன் பேரணி நடந்தது. அப்போது பொதுமக்கள் போன்று சாதாரண உடையில் சுமார் 250 நக்சலைட்டுகள் வந்து பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி சுக்மாவில் இருந்து ஜக்தல்பூருக்கு திரும்பியபோது நக்சலைட்டுகள் திடீர் என்று தாக்குதல் நடத்தினர். இதில் பேரணியில் கலந்து கொண்ட மூத்த தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் குமார் முதலியார் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேலும், அவரது மகனும் நக்சலைட்டுகளால் நேற்று கடத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவர்களில் 20 போலீசாரும் அடக்கம். கர்மா காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர். அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான விசி சுக்லா விமானம் மூலம் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாயந்ததில் அவரது கல்லீரல் மற்றும் நுரையீரல்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து அறிந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு ராய்பூர் சென்று அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் இன்று சத்தீஸ்கர் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதுயில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications