’டி.எம்.எஸ் மறைவு, தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’: ரோசைய்யா

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் பத்மஸ்ரீ டி.எம்.சவுந்தரராஜன் மறைவு செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தனது சிம்மக்குரலால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட டி.எம்.சவுந்தரராஜன், பெரும்பாலான கதாநாயகர்களுக்காக பாடும்போது அவர்களது குரல் போல அப்படியே பாடுவதில் கைதேர்ந்தவர்.
அவரது பக்திப்பாடல்கள் உணர்வு மிக்கதாகவும், இதயத்தை வருடும் வகையிலும் இருக்கும். அந்த பாடல்கள் கேட்பவரின் செவிகளில் ரீங்காரமிடும். அவரது பாடல்கள், பக்தி உலகுக்கு அப்படியே அழைத்துச் சென்றுவிடும்.
இசை உலகில் அவருடைய 60 ஆண்டுகால நீண்ட அனுபவத்தில் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தென்னிந்திய இசை உலகில் டி.எம்.சவுந்தரராஜனின் பாடல்கள் தனி முத்திரை பதித்துள்ளன.
அவரது மறைவு தமிழ்த்திரை உலகிற்கு குறிப்பாக தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications