தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மேலும் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏ.ஐ.சி.டி.இ தலைவர் மான்தா கூறினார்.
இது குறித்து சென்னையில் ஏ.ஐ.சி.டி.இ தலைவர் மான்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம் கல்லூரிகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 8 பொறியியல் கல்லூரிகள் தாமாகவே முன்வந்து மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த தேவையான திட்டங்கள் குறித்து கருத்து அறிய அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினோம். இதில், மகாராஷ்டிரா மட்டும் பதில் கொடுத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உயர் கல்வியின் தர மேம்பாடு குறித்து பதில் அளிக்கவில்லை என்றார் வேதனையாக.












Click it and Unblock the Notifications