சுக்லா-ஜேட்லி சந்திப்பு! விசாரணை முடியும் வரை சீனி பதவி விலக சுக்லா, ஜேட்லி வலியுறுத்தல்!!

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீனிவாசன் இதனை நிராகரித்து வருகிறார்.
இந்நிலையில் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா, பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லியை இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சுக்லா, சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அருண் ஜேட்லியும் நானும் என்ன நினைக்கிறோம் எனில் இந்த பிக்ஸிங் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். தற்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனின் பரிந்துரைகள் பிசிசிஐக்கு அனுப்பாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனால் சீனிவாசன் பதவி விலக வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications