என் கருத்தையே சுக்லா சொன்னார்.. விசாரணையில் இருந்து விலகி இருக்கிறேன்- இது 'சீ'னி' வெடி!

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து பிசிசிஐ தலைவராக இருக்கும் அவரது மாமனார் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா இன்று பிசிசிஐ துணைத் தலைவர் ஜேட்லியை சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை முடியும் வரை அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியிருந்தது.
இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், ராஜிவ் சுக்லா கடைசியாக கொடுத்த பேட்டியைப் பார்த்தேன். கொல்கத்தாவில் நான் என்ன சொன்னேனோ அதையே அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். விசாரணையில் இருந்தும் விசாரணைக் குழு நியமனத்தில் இருந்தும் நான் விலகியே இருக்கிறேன். அதைத்தான் சுக்லாவும் இப்போது சொல்லியிருக்கிறார். அதேபோல் விசாரணைக் கமிஷன் சுதந்திரமானது. 2 நீதிபதிகள், பிசிசிஐ செயலர் இந்த கமிஷன் உறுப்பினர்களாக இருப்பார்கள். விசாரணைக் கமிஷனின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதைத் தவிர நான் சொல்வதற்கு இல்லை என்றார் அவர்.
ராஜிவ் சுக்லாவோ, விசாரணை முடியும் வரை சீனிவாசன் தாமாக விலகி இருக்க வேண்டும் என்று பதவி விலகல் பற்றி கூறியிருந்தார். ஆனால் சீனிவாசனோ விசாரணையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ராஜிவ் சுக்லா சொல்வதும் என் கருத்தே என்று புதிய கருத்தாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications