கற்பழிப்புகளைத் தடுக்க பிரா விளம்பர பெண் பொம்மைகளைத் தடை செய்க... புத்திசாலி அரசியல்வாதிகள்!
மும்பை: கற்பழிப்புகள், ஈவ் டீசிங் போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க கடைகளில் உள்ளாடை விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பெண் பொம்மைகள்தான் காரணம். இதைப் பார்த்துதான் பலரும் கெட்டுப் போகின்றனர். எனவே இந்த பொம்மைகளைத் தடை செய்ய வேண்டும் என்று மும்பை அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பேசியுள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பெண் பொம்மைளை கடைகளில் பயன்படுத்துவதற்குக் தடை விதிக்கவும் மும்பை மாநகராட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தீர்மானத்தை பாஜக கவுன்சிலர் ரித்து தவதேதான் கொண்டு வந்தார் . அவர் கூறுகையில், பிரா, பேண்டீஸ் போன்றவற்றை விளம்பரப்படுத்த பெண் பிளாஸ்டிக் பொம்மைகளை கடைகளில் வைக்கின்றனர். அவை உண்மையில் கற்பழிப்புகளைத் தூண்டும் வகையில் உள்ளன. இளைஞர்களின் மனங்களை இவை கெடுத்து விடுகின்றன. எனவேதான் இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நான்கோரிக்கை தீர்மானம் கொண்டு வந்தேன்.
இதேபோல டிவி, பத்திரிக்கை போன்றவற்றில் வெளியாகும் பிரா உள்ளிட்ட உள்ளாடைகளுக்கான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் ரித்து கூறினார்.
ஆனால் இப்படிப்பட்ட யோசனைகள் முட்டாள்தனமானவை, கேலிக்கூத்தானவை என்று மும்பை மக்கள் விமர்சிக்கின்றனராம். ஒரு பொம்மையால்தான் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications