ஸ்ரீசாந்த்துக்கு புக்கிகள் கொடுத்த பணத்தில் ரூ. 5.5. லட்சம் பறிமுதல்
டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு, சூதாட்ட புக்கிகள் கொடுத்த பணத்திலிருந்து ரூ. 5.5. லட்சம் பணத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளதா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் போட்டிகளை பிக்ஸ் செய்வதற்காக புக்கிகள் ஸ்ரீசாந்த்துக்குக் கொடுத்த பணம் இது என்று கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த்தின் நண்பரும், ஈவென்ட் மேனேஜருமான அபிஷேக் சுக்லாவின் உதவியுடன், மும்பையிலிருந்து இந்தப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனராம். சுக்லா, டெல்லியில் புதன்கிழமை காலையில் கைது செய்யப்பட்டார்.
அவரை உடனடியாக மும்பைக்குக் கொண்டு சென்ற போலீஸார் அவர் மூலமாக இந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனராம்.
சுக்லாவுக்கும், ஸ்ரீசாந்த்தின் கேரள நண்பரான ஜிஜு ஜனார்த்தனுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சை இடைமறித்துக் கேட்டபோதுதான் சுக்லாவின் பங்கு குறித்து தெரிய வந்ததாம் போலீஸாருக்கு. இவர் மும்பையில் ஸ்ரீசாந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த பல பொருட்களை ரகசியமாக இடமாற்றி விட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இதனால் ஆதாரங்களை அழித்ததாக சுக்லா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications