எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் - மாணவிகள் அபார சாதனை - முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள்!!

இந்த ஆண்டு 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்ற ஈரோடு மாணவி அனுஷா மாநிலத்தில் முதலிடம் பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முதலிடம் பெறுபவர்களே மாநில அளவில் முதலிடம் பெற்றவராக அரசு கணக்கில் எடுத்துக் கொள்வது வழக்கம்.
498 மதிப்பெண்கள் பெற்ற மற்ற மாணவிகள்...
பொன்சங்கரி (ஈரோடு), தீபதி (மேலூர்), காயத்ரி (திருச்சி), மெர்சியா செரீன் (திருச்சி), சாருமதி (திருப்பத்தூர்), சோனியா (நெல்லை), யுவதுர்கா (சிதம்பரம்), வினுஷா (வேலூர்).
497 மதிப்பெண்கள் பெற்று 52 மாணவர்கள் 2-வது இடத்தை பிடித்தனர். 136 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.
தேர்ச்சி விகிதம்
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாகும். இதில் மாணவிகளின் விகிதம் 92 சதவீதம். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 83.14 சதவீதமாகும்.
தேர்ச்சி விகிதம், முதலிடம் என அனைத்திலுமே இந்த ஆண்டு மாணவிகள் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மாணவிகளின் கவனம் சிதறாமை, பொறுப்புணர், கல்வி ஆர்வத்துக்கு சான்றாக இந்த தேர்வு முடிவுகள் திகழ்கின்றன.
பெண்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு பெரும் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் செய்தியாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications