Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. படித்து நொறுக்கிய மாணாக்கர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு 10ம் வகுப்புத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பின்னி எடுத்துள்ளனர். இப்படி ஒரு சாதனை, இப்படி ஒரு தேர்ச்சியை இதுவரை தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாறு கண்டதில்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்து காலரை உயர்த்தி விட்டு நிற்கின்றனர் மாணவ, மாணவியர்கள்.

மாணவியர்களே அதிகம் பாஸ் என்று சொல்வது சர்க்கரைப் பொங்கல் இனிப்பாக இருக்கிறது என்பதற்குச் சமம். அது வழக்கமாக நடப்பதுதான்.

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் மூன்று இடங்களில் ஏகப்பட்ட மாணவ, மாணவியர் பாய்ந்து வந்து பங்கு போட்டு பட்டையைக் கிளப்பியிருப்பது இதுவரை தமிழகம் கண்டிராதது.

3 இடங்கள்.. 187 மாணவ மாணவியர்

3 இடங்கள்.. 187 மாணவ மாணவியர்

முதல் மூன்று இடங்களை மட்டும் 187 மாணவ, மாணவியர் பங்கு போட்டுள்ளனர். இது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று.

மாணவியர்களின் அபார சாதனை

மாணவியர்களின் அபார சாதனை

அதிலும் இந்த 187 பேரில் மாணவியர்களே அதிகம் என்பது இன்னொரு புதிய சாதனை.

முதல் இடத்தில் 9 மாணவியர்

முதல் இடத்தில் 9 மாணவியர்

அதேபோல முதல் இடத்தை இதுவரை இல்லாத அளவுக்கு 9 பேர் பெற்றுள்ளனர். அதை விட பெரிய சாதனை அந்த 9 பேரும் மாணவியர் என்பது.

9 பேரில் முதல்வர் அனுஷா

9 பேரில் முதல்வர் அனுஷா

இருப்பினும் இந்த 9 பேரிலும் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஈரோடு மாவட்ட மாணவி அனுஷா. இவர் தமிழில் அதிகம் மார்க் வாங்கியதால் இந்த சிறப்பு கிடைத்துள்ளது.

2வது இடத்தில் 52 பேர்

2வது இடத்தில் 52 பேர்

இதுவரை இல்லாத அளவுக்கு 2வது இடத்தை 52 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தமிழகத்தில் இதுவரை நடந்திராதது.

3வது இடத்தில் 136 பேர்

3வது இடத்தில் 136 பேர்

அதேபோல 3வது இடத்தை 136 பேர் பெற்றுள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகும்.

பாஸானதிலும் சாதனை

பாஸானதிலும் சாதனை

மேலும் தேர்ச்சி விகிதமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட3 சதவீதம் பேர் கூடுதலாக பாஸாகியுள்ளனர். இந்த ஆண்டு இது 89 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாணவிகள் வரலாறு காணாத தேர்ச்சி

மாணவிகள் வரலாறு காணாத தேர்ச்சி

தேர்வு எழுதிய மாணவிகளில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வெறும் எட்டு சதவீதம் பேரே பெயிலாகியுள்ளனர். மாணவர்களில் 86 சதவீதம் பேரே பாஸாகியுள்ளனர்.

29,905 கணக்குப் புலிகள்

29,905 கணக்குப் புலிகள்

கணிதப் பாடத்தில் சென்டம் போடுவது, அதாவது நூற்றுக்கு நூறு வாங்குவதிலும் சாதனை. கடந்த ஆண்டு 1141 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கினர். ஆனால் இந்த ஆண்டோ தடாலடியாக பாய்ந்துவிட்டனர். மொத்தம் 29,905 பேர் நூற்றுக்கு நூறு போட்டுள்ளனர்.

அறிவியலில் அபாரம்

அறிவியலில் அபாரம்

அதேபோல அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு வெறும் 9237 பேரே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். ஆனால் இந்த முறை 38,154 பேர் சென்டம் போட்டுள்ளனர்.

சமூக அறிவியலிலும் சாதனை

சமூக அறிவியலிலும் சாதனை

சமூக அறிவியல் பாடத்தில் கடந்த முறை 5305 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 19,680 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

நிச்சயம் வாயார பாராட்டியே ஆக வேண்டும் இந்த மாணவ் செல்வங்களைப் பெற்ற உள்ளங்களை....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+