தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. படித்து நொறுக்கிய மாணாக்கர்கள்!
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு 10ம் வகுப்புத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பின்னி எடுத்துள்ளனர். இப்படி ஒரு சாதனை, இப்படி ஒரு தேர்ச்சியை இதுவரை தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாறு கண்டதில்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்து காலரை உயர்த்தி விட்டு நிற்கின்றனர் மாணவ, மாணவியர்கள்.
மாணவியர்களே அதிகம் பாஸ் என்று சொல்வது சர்க்கரைப் பொங்கல் இனிப்பாக இருக்கிறது என்பதற்குச் சமம். அது வழக்கமாக நடப்பதுதான்.
ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் மூன்று இடங்களில் ஏகப்பட்ட மாணவ, மாணவியர் பாய்ந்து வந்து பங்கு போட்டு பட்டையைக் கிளப்பியிருப்பது இதுவரை தமிழகம் கண்டிராதது.

3 இடங்கள்.. 187 மாணவ மாணவியர்
முதல் மூன்று இடங்களை மட்டும் 187 மாணவ, மாணவியர் பங்கு போட்டுள்ளனர். இது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று.

மாணவியர்களின் அபார சாதனை
அதிலும் இந்த 187 பேரில் மாணவியர்களே அதிகம் என்பது இன்னொரு புதிய சாதனை.

முதல் இடத்தில் 9 மாணவியர்
அதேபோல முதல் இடத்தை இதுவரை இல்லாத அளவுக்கு 9 பேர் பெற்றுள்ளனர். அதை விட பெரிய சாதனை அந்த 9 பேரும் மாணவியர் என்பது.

9 பேரில் முதல்வர் அனுஷா
இருப்பினும் இந்த 9 பேரிலும் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஈரோடு மாவட்ட மாணவி அனுஷா. இவர் தமிழில் அதிகம் மார்க் வாங்கியதால் இந்த சிறப்பு கிடைத்துள்ளது.

2வது இடத்தில் 52 பேர்
இதுவரை இல்லாத அளவுக்கு 2வது இடத்தை 52 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தமிழகத்தில் இதுவரை நடந்திராதது.

3வது இடத்தில் 136 பேர்
அதேபோல 3வது இடத்தை 136 பேர் பெற்றுள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகும்.

பாஸானதிலும் சாதனை
மேலும் தேர்ச்சி விகிதமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட3 சதவீதம் பேர் கூடுதலாக பாஸாகியுள்ளனர். இந்த ஆண்டு இது 89 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாணவிகள் வரலாறு காணாத தேர்ச்சி
தேர்வு எழுதிய மாணவிகளில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வெறும் எட்டு சதவீதம் பேரே பெயிலாகியுள்ளனர். மாணவர்களில் 86 சதவீதம் பேரே பாஸாகியுள்ளனர்.

29,905 கணக்குப் புலிகள்
கணிதப் பாடத்தில் சென்டம் போடுவது, அதாவது நூற்றுக்கு நூறு வாங்குவதிலும் சாதனை. கடந்த ஆண்டு 1141 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கினர். ஆனால் இந்த ஆண்டோ தடாலடியாக பாய்ந்துவிட்டனர். மொத்தம் 29,905 பேர் நூற்றுக்கு நூறு போட்டுள்ளனர்.

அறிவியலில் அபாரம்
அதேபோல அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு வெறும் 9237 பேரே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். ஆனால் இந்த முறை 38,154 பேர் சென்டம் போட்டுள்ளனர்.

சமூக அறிவியலிலும் சாதனை
சமூக அறிவியல் பாடத்தில் கடந்த முறை 5305 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 19,680 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
நிச்சயம் வாயார பாராட்டியே ஆக வேண்டும் இந்த மாணவ் செல்வங்களைப் பெற்ற உள்ளங்களை....
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications