சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்.. அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட இளைஞர்
சென்னை: சென்னையில் இன்று காலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டார்.
ராணி சீதை ஹால் அருகே இந்த சம்பவம் நடந்தது.அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை ஒரு கும்பல் ஆட்டோவில் துரத்தி வந்தது.
இதைப் பார்த்த அந்த வாலிபர் பைக்கை விட்டு விட்டுஇறங்கி ஓடினார். இதையடுத்து ஆட்டோவில் இருந்து குதித்த 3 பேர் அந்த நபரை துரத்தினர். பின்னர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.
உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் அந்த நபர் அலறியபடி கீழே விழுந்தார். இதைப் பார்த்து சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
தகவல் அறிந்ததும் ஆயிரம் விளக்கு போலீஸார் விரைந்து வந்தனர். அந்தநபரை மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெட்டப்பட்ட நபரின் பெயர் கென்னத். கோயம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள ஜெப கூடத்துக்கு பிரார்த்தனைக்கு வந்துள்ளார். அப்போது தான் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கென்னத்தை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications