For Daily Alerts
Just In
பெங்களூரில் 5 ஆண்டுகள் பெற்றோரால் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட பெண் மீட்பு!
பெங்களூர்: பெங்களூரில் சிறிய அறை ஒன்றுக்குள் 35 வயது பெண்ணை 5 ஆண்டுகளாக பெற்றோர் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் பெண்ணை மீட்டதோடு பெற்றோரை கைது செய்தனர்.
பெங்களூரில் 35 வயது பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறிய அறை ஒன்றிர்க்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்ணை திங்களன்று போலீசார் மீட்டனர்.
அந்தப் பெண் 5 ஆண்டுகளாக அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பக்கத்து வீட்டினர் தெரிவித்தனர். ஆனால் பக்கவாத நோயின் பாதிப்பினாலேயே பெண்ணை படுக்கையில் படுக்க வைத்திருந்ததாக போலீசில் அந்தப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
அறையில் இருந்து மீட்கப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் அச்சத்துத்துடனே இருந்ததாக போலீசார் கூறினார்.
Comments
English summary
The police have rescued a 35-year-old woman in Bangalore who was allegedly imprisoned by her parents for a shocking five years in a small room at their residence. Police rescued the woman after she screamed for help all night on Monday.