ஜாமீனில் விடுதலையான விண்டு.. மும்பை போலீஸைப் பழிவாங்கப் போறாராம்!
மும்பை: ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்று தற்போது ஜாமீன் பெற்ற விண்டு தாராசிங், மும்பை போலீஸாரிடம் இழப்பீடு கோரி வழக்குத்த தொடரப் போவதாக சினிமா பாணியில் பேசியுள்ளார்.
விண்டுவுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இதுகுறித்து அவரது வக்கீல் மானே ஷிண்டே கூறுகையில், எனது கட்சிக்காரர் விண்டு தாராசிங், மும்பை காவல்துறையிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இழப்பீடு கோரவுள்ளார்.
எனது கட்சிக்காரர் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்தது சட்டவிரோதமாகும். எனவே இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது.
இந்தியாவில் தற்போது சூதாட்ட தடுப்புச் சட்டம் என்று எதுவுமே இல்லை. எனவே விண்டுவைக் கைது செய்தது சட்டவிரோதமாகும். மேலும் ஜாமீனில் வரக் கூடிய பிரிவுகளின் கீழ்தான் விண்டுவைக் கைது செய்துள்ளனர். எனவேஅவரை ஒரு வாரத்திற்கு மேல் கஸ்டடியில் வைத்தது சட்டவிரோதமானது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications