மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்க வேண்டும்: முதல்வர்கள் மாநாட்டில் ஜெ., வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று நடந்த உள்நாட்டு பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவரது அறிக்கையை அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நடத்து நிறுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சதீவை மீட்பதே நிரந்திர தீர்வாக அமையும்.
தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வேரூன்றவிடாமல் தமிழக அரசு தடுத்துள்ளது.
மேலும் காவல்துறை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications