பிக்சிங்: சிபிசிஐடி முன்பு ஆஜராக அவகாசம் கேட்ட சென்னை ஹோட்டல் அதிபர்: மனைவி மனு தாக்கல்
சென்னை: ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளார் சென்னை ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால். இதற்கான மனுவை சிபிசிஐடி முன்பு ஆஜரான அவரது மனைவி வந்தனா இன்று தாக்கல் செய்தார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூதாட்டத்தில் தொடர்புள்ளதாக ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து விசாரணைக்காக கடந்த 30ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விக்ரம் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சம்மனை நிராகரித்த விக்ரம் அகர்வால் குறிப்பிட்ட தேதியில் சி.பி.சி.ஐ.டி முன் ஆஜராகவில்லை.
அதற்குப் பதிலாக மே 31ஆம் தேதி மும்பை போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மும்பை போலீசார் நடத்திய விசாரணையில், ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் அவர் சாட்சியாக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள சி.பி.சி. ஐ.டி. அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு பதில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த விக்ரம் அகர்வால் மனைவி வந்தனா, தனது கணவர் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தார்.
அவகாசம் கேட்டு மனு
இதனிடையே, கணவர் விக்ரம் அகர்வால் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கேட்டு அவரது மனைவி வந்தனா, சிபிசிஐடி போலீசிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விக்ரம் அகர்வாலுக்கு உடல் நிலை சரியில்லை என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை அவரது வழக்கறிஞர் கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications